க.பரமத்தி, மார்ச்.2: க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதபட்டி காலனி பகுதியில் சளித்தொல்லையால் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதபட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனி என்பவரது மகன் அப்பாவு (54). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சளி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தீராத சளி தொல்லையால் அப்பாவு வீட்டில் கீழே விழுந்ததாக தெரிகிறது.
உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அப்பாவு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அப்பாவு மனைவி பூங்கொடி அளித்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
