தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு

சேந்தமங்கலம், மார்ச் 15: சேந்தமங்கலம் அடுத்த செட்டிகுளம் ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் அபினேஷ் (27), நாமக்கல்லில் உள்ள ஒரு டீ கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சினேகா (24). நேற்று அதிகாலை அபினேஷ் டீக்கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது, சினேகாவின் பாட்டி குழந்தையம்மாள் எழுந்து, கதவைத் திறந்து வைத்துவிட்டு, கழிவறைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த சினேகாவின் கழுத்தில் இருந்த அரை பவுன் தாலியுடன் இருந்த மஞ்சள் கயிறை அறுத்து கொண்டு தப்பி சென்றார். அப்போது கதவு சத்தம் கேட்டு எழுந்த சினேகா, கழுத்தில் இருந்த தாலி கயிறு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர் டூவீலரில் தப்பி சென்றது தெரிந்தது. இது குறித்து சினேகா கொடுத்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: