தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்செங்கோடு, மார்ச் 18: திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், நகராட்சியில் தொழில் உரிமம் பெற வேண்டியது கட்டாயம். இதற்காக ஏற்கனவே அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொழில் உரிமம் இது நாள் வரை எடுக்காத நிறுவனங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு, 7 நாட்கள் கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட நிறுவனங்களில், தொழில் உரிமம் பெற எவ்வித முயற்சி மேற்கொள்ளாததால், 4 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அதிகாரி வெங்கடாசலம் தலைமையில் சென்ற நகராட்சி பணியாளர்கள், அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்படி கடைகள் உரிய முறையில் உரிமம் பெற்றவுடன், வணிகம் செய்ய அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: