மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை குறைவை சந்தித்தது. அதாவது நேற்று காலை 9.46 மணி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.8,020க்கும், பவுனுக்கு ரூ.360 ரூபாய் குறைந்து ஒரு பவுன் ரூ.64,160 ஆகவும் விற்பனையானது. மீண்டும் பிற்பகல் 12.56 மணியளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8060க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,480க்கும் விற்கப்பட்டது.

ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை, அதுவும் 3 மணி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. நேற்றும் விலை சற்று குறைந்தது. அதாவது நேற்று விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,030க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 240க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8040-க்கும், ஒரு சவரன் ரூ.64,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: