×
Saravana Stores

தேர்தல் ஜுரத்தில் எடப்பாடி உளறுகிறார்: அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி

சேலம்: சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கான மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், 90 பயனாளிகளுக்கு ரூ.50.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன. அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜுரம் வந்து விட்டதால் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார்‌. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் ஜுரத்தில் எடப்பாடி உளறுகிறார்: அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Eadapadi Spears ,Minister Rajendran ,Salem ,of ,Minister ,Tourism ,Rajendran ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...