×
Saravana Stores

ஒன்றுபட்டு உழைப்போம் நாடாளுமன்ற தேர்தல் வேற சட்டமன்ற தேர்தல் வேற: காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி, அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பேசியதாவது: அதிமுக ஆட்சியில் எல்லா துறையையும் சிறப்பாக செயல்படுத்தி தேசிய விருது பெற்றோம். ஆனால் எங்களை பார்த்து மோசமான ஆட்சி என்கிறார்கள். மக்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. ஆகவே 2026ம் ஆண்டு ஒன்றுபட்டு நாம் உழைத்து ஆட்சியைப் பிடிக்க பாடுபடுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள், தொண்டர்கள் நேரமாகிவிட்டது என்று வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றுபட்டு உழைப்போம் நாடாளுமன்ற தேர்தல் வேற சட்டமன்ற தேர்தல் வேற: காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram General Assembly ,Chennai ,53rd Annual General Meeting of the Party ,Kanchipuram District Adimuga ,Kanchipuram Gandhi Road Teradi ,Kanchipuram District ,Somasundaram ,Former ,MLA ,Madhananthapuram Palani ,Kunnawakkam ,Parliamentary ,Venera Assembly Election ,Kanchipuram General Meeting ,Dinakaran ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி