×
Saravana Stores

தமிழ்நாடு அரசு வழங்கும் தீபாவளி சிறப்புத் தொகுப்பு அக்.28 முதல் விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மூலம் அக்டோபர் 28ம் தேதி முதல் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகின்ற அக்டோபர் 28 முதல் நடைபெறவுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்

இது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. அதில், பிரீமியம், எலைட் என இரண்டு வகையாக தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. சிறப்புத் தொகுப்பு விற்பனையில் அதிரசம்-முறுக்கு காம்போ விற்பனை தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகுப்பு ரூ.199 என்ற விலையிலும் எலைட் தொகுப்பு ரூ.299 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. அதிரசம்-முறுக்கு காம்போ தொகுப்பு ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசு வழங்கும் தீபாவளி சிறப்புத் தொகுப்பு அக்.28 முதல் விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Minister Peryakarapan ,Chennai ,Minister ,Peryakarapan ,Diwali ,Government ,Tamil Nadu ,
× RELATED தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி...