திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்: வரும் 9ம் தேதி நடக்கிறது

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 9ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில், கரூர், கோவை ரோடு, டான்சி அருகில் உள்ள பிரேம் மகாலில் நடக்கிறது. மாநில செயலாளர் எழிலரசன் தலைமை வகிக்கிறார்.

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி மற்றும் மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரண சங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி முன்னிலை வகிக்கின்றனர்.

அப்போது மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் துணை முதல்வரும் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், தமிழ் மாணவர் மன்ற அமைப்பினை ஏற்படுத்தி, அதில் உறுப்பினராக சேர்த்த படிவங்களை ஒப்படைத்தல் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்: வரும் 9ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: