நெல்லையில் விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த சுப்பையா (57) என்பவர் கடந்த 21ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லையில் விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: