×
Saravana Stores

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வெற்றி செல்லாது என்ற ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!

மதுரை: சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி வெற்றி செல்லாது என்ற சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவியின் வெற்றி செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் சங்கராபுரம் ஊராட்சி தேர்தலில் 62 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, தான் அறிவிக்கப்பட்டேன். தான் வீட்டுக்குச் சென்ற நிலையில் பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வெற்றி செல்லாது என்ற ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!! appeared first on Dinakaran.

Tags : Sankarapuram panchayat ,IC Court ,Madurai ,High Court ,Sivagangai District Court ,Sankarapuram ,panchayat ,Devi Vetri ,ICourt ,President ,Devi ,Dinakaran ,
× RELATED பரவை கிராமத்தில் நூலகத்தை இடித்து...