×
Saravana Stores

கூட்டுறவு துறையில் பட்டயம் முடித்த 60 மாணவர்களுக்கு சான்றிதழ் இணைப்பதிவாளர் வழங்கினார்

திருவள்ளூர்: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் செங்குன்றம் துணை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு துறையில் பட்டயம் முடித்த 60 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி தலைமை தாங்கி, 60 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

மேலும் இந்த பயிற்சி நிலையத்தில் படித்து முடித்த மாணவர்களில் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களையும் பாராட்டி கூட்டுறவு துறையின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் போது பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளர்களான துணைப்பதிவாளர் (ஓய்வு) கே.சேகர், உதவி இயக்குனர் (தணிக்கை) ரத்தினம், எம்.கூட்டுறவு சார் பதிவாளர் (ஓய்வு) சிவராமசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் கே.ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கூட்டுறவு துறையில் பட்டயம் முடித்த 60 மாணவர்களுக்கு சான்றிதழ் இணைப்பதிவாளர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vertical Sub-Training Centre ,Chennai Cooperative Management Centre ,Th. Sanmukavalli ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...