×
Saravana Stores

திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் சாவு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலூர் மகன் வீராசாமி (62). இவர் அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மணலூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கங்கை அம்மன் கோயிலில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியின் கேட் வாலை திறந்து அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குடிநீர் தொட்டிக்கு அருகில் மதுபோதையில் வந்த வீராசாமி கால் தவறி தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அவ்வழியாக சென்ற யாருக்கும் தெரியவில்லை.

நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் தொட்டியில், வீராசாமி இறந்து கிடப்பதை அறிந்து மணலூர் பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணலூர்பேட்டை போலீசார் வீராசாமி உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Veerasamy ,Manalurpet ,Gangai Amman temple ,
× RELATED வேதம் விட்ட கண்ணீர்