கட்டிடம் எப்போது சரிந்து விழும் என்ற அச்சத்தில் இங்கு பயிலும் குழந்தைகளை அங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு மாதம்தோறும் வாடகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பழுதான கட்டிடத்தை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சூனாம்பேடு ஊராட்சியில் பழுதடைந்த அங்கன்வாடி மையம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.