இந்நிலையில், தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தில் 30க்கும் மேற்பட்ட மகளிருக்கு ஆரி ஓர்க் எனப்படும் ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான 30 நாள் பயிற்சி, இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி வாலாஜாபாத் கிளை மேலாளர் ஜெயந்தி, நிறுவன மாவட்ட மேலாளர் உமாபதி, உதவி மேலாளர் கார்த்திகேயன், பயிற்சியாளர் ஆறுமுகம், வட்ட ஒருங்கிணைப்பாளர் ரேணுகா மற்றும் ஊராட்சி செயலாளர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
The post தேவரியம்பாக்கத்தில் மகளிர் சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.