வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

 

வேலாயுதம்பாளையம், அக். 18: கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் தலைமையிலான போலீசார் கந்தம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் அருகே மெம்பர் கந்தசாமி தெரு அருகில் உள்ள தங்காயி அம்மன் கோவில் எதிரில் சந்தேகப்படும் படி 2 பேர் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களை காவல் நிலையம் கொண்டுவந்தனர். விசாரணையில் கந்தம்பாளையம் அருகே மெம்பர் கந்தசாமி தெரு பகுதியை சேர்ந்த அப்துல் சத்தார் என்கிற ரஹ்மான் (25), முல்லை நகர், மூன்றாவது கிராஸ் பகுதியைச்சேர்ந்த சுகந்தன் (23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்

The post வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: