×
Saravana Stores

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

திருச்சி, அக்.22: திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகர மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மேயர் அன்பழகனிடம் வழங்கினர். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்டவை குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.

அவற்றை பெற்றுக்கொண்ட மேயர், மனுக்கள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்துக்கு துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தர். துணை கமிஷனர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டத்தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Trichy ,Trichy Corporation ,Mayor ,Anbazagan ,Trichy Municipal Corporation ,Mayor Anbazagan ,Office ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் மக்கள் குறை...