குடவாசல் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

 

வலங்கைமான், அக். 22: குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 86 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலைமை வகித்தார்.

பள்ளி முதுகலை ஆசிரியர் சண்முகம் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுந்தரி முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் செந்தில், சேரன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் மற்றும் குடவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் சிறப்புரையாற்றினர். இதில் 86 மாணவர் களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். நிறைவாக பள்ளி முதுகலை ஆசிரியர் மகேஷ் குமார் நன்றியுரை வழங்கினார்.

The post குடவாசல் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: