பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி

 

புதுக்கோட்டை. அக்.22: புதுக்கோட்டையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 202 மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின கைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய் மாவட்ட குழு விளையாட்டு போட்டியில் 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியினை பிரகதாம்பாள் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் சண்முகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 குறுவட்டங்களைச் சேர்ந்த சுமார் 202 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை கோனாபட்டு சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. போட்டியின் பொறுப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரிச்சர்ட் அருள்செல்வன், நாச்சியப்பன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இன்று அதே வளாகத்தில் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: