புதுக்கோட்டை மாவட்டத்தில் 22ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு

புதுக்கோட்டை,அக்.19: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு 22ம்தேதி (செவ்வாய்க்கிழமை), புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள உறுதிமொழிகளுள் நிறைவேற்றப்பட்டவை மற்றும் பணிகள் நடைபெற்று வருபவை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், புதுக்கோட்டை மாவட்டம் தொடர்புடைய உறுதிமொழிகளை ஆய்வு செய்திட வருகைபுரிய உள்ளார்கள்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்வேல்முருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்களான, அரவிந்த் ரமேஷ், அருள்,. சக்ரபாணி,. சீனிவாசன்,. தளபதி,. நல்லதம்பி (திருப்பத்தூர்), பூமிநாதன்,. மணி,. மாங்குடி,. மோகன்,. ஜெயக்குமார் ஆகிய 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி குழுவினர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 22ம்தேதி வருகைபுரிந்து களஆய்வு மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் நடத்திட உள்ளார்கள்.

இந்நிகழ்வுகளில், சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர்சீனிவாசன் அவர்கள், இணைச் செயலாளர்.கருணாநிதி அவர்கள், துணைச் செயலாளர்ரவி, சார்புச் செயலாளர்.பியூலஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 22ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: