ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில்

வேலூர், அக்.21: தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் சீசன் கொள்ளையர்களை பிடிக்க ஆர்பிஎப், ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடெங்கும் தீபாவளி பண்டிகை வரும் 31ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டிய நாட்களில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். அதனை பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை திருடும் கும்பல் நடமாட்டம் இருக்கும் என்பதால் ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில் பண்டிகை கால திருட்டு சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை வழியாக இயங்கும் ரயில்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் மப்டியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம், சீசன் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். அதனை தடுக்க தற்போதே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சந்தேக நபர்கள், பழைய கொள்ளையர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம். மேலும் பயணிகளின் உடமைகள் திருட்டு போவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்’ என்றனர்.

The post ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் appeared first on Dinakaran.

Related Stories: