இரும்பு தடுப்பு கட்டையில் பைக் மோதி எலக்ட்ரீஷியன் பலி

 

சிதம்பரம், அக். 21: சிதம்பரம் அருகே உள்ள பண்ணப்பட்டு ஓடை தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(50). இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். நேற்று மாலை சிவப்பிரகாசம் தனது மோட்டார் சைக்கிளில் சிவாயத்திலிருந்து கூடுவெளி சாவடி வழியாக பண்ணப்பட்டு வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கூடுவெளி சாவடி அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதினார்.

இதில் இரும்பு கட்டையில் கழுத்து வெட்டுப்பட்டு, தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவப்பிரகாசம் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரும்பு தடுப்பு கட்டையில் பைக் மோதி எலக்ட்ரீஷியன் பலி appeared first on Dinakaran.

Related Stories: