திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தின்போது திருமலையில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 5வது சனிக்கிழமையொட்டி கோயிலில் கூட்டம் நேற்று அலைமோதியது. அதன்படி நேற்று 80,741 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

31,581 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.45 கோடி காணிக்கை செலுத்தினர். விடுமுறை தினமான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 5 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: