இந்திய வாகன சந்தையில் கிடைக்காத இந்த கார், துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரை இந்தியாவுக்குக் கொண்டுவர நிறைய பணம் செலவாகும் என்று கூறுகின்றனர். இந்த வாகனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், புல்லட் ஷாட்களை கூட தடுக்கும் திறன் கொண்ட கண்ணாடி கவசங்கள் உள்ளன. வெடிமருந்துகளை கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு, உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சல்மான் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக குண்டு துளைக்காத வாகனம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில், சல்மான் கான் தொகுத்து வழங்கும் தனியார் டிவி நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக சுமார் 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவை அவர் நியமித்துள்ளார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்து வருவதால் கூடுதல் பாதுகாப்பை போலீசாரும் வழங்கி உள்ளனர்.
The post லாரன்ஸ் கும்பலால் மிரட்டல் வருவதால் ரூ.2 கோடியில் ‘புல்லட் புரூப்’ கார் வாங்கிய சல்மான்: 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவும் நியமனம் appeared first on Dinakaran.