மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

 

மஞ்சூர், அக்.15: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் 3 நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் துவங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பரவலாக நல்ல மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, செப்டம்பரில் அவ்வப்போது லேசான மழை பெய்த நிலையில் பெரும்பாலான நாட்களும் பகல் நேரங்களில் நல்ல வெயில் நிலவியது.

இந்நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளதுடன் கடந்த மூன்று நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இரவு நேரங்களில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை விடியும் வரை தொடர்கிறது. தொடர்ந்து பிற்பகல் வரை மேக மூட்டத்துடன் சாரல் மழையும் அதை தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது.

The post மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை appeared first on Dinakaran.

Related Stories: