₹18.10 லட்சத்தில் திட்டப்பணிகள்

தேன்கனிக்கோட்டை, அக்.18: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் ஊராட்சியில் ₹18.10 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. நாட்றாம்பாளையம் ஊராட்சி, சிவலிங்கபுரம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ₹5 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாப் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. அதேபோல், மாசானட்டி கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ₹11.10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, ஏத்தக்கிணறு பகுதியில் ₹3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் அமைக்கும் பணி தொடங்கியது. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம், ஊராட்சி செயலாளர் மரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ₹18.10 லட்சத்தில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: