ஓசூரில் தக்காளி விலை உயர்வு

 

ஓசூர், அக்.14: ஓசூர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்த்தற்கு காணம் என கூறப்படுகிறது. ஓசூரில் தக்காளி கிலோ ₹50 முதல் ₹60வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ₹5 முதல் ₹10க்கு விற்பனையானது. இந்நிலையில் ஒரே வாரத்தில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் ₹60க்கு விற்பனையானது. மளிகை கடைகளில் தக்காளி கிலோ ₹50வரை விற்பனை செய்யப்படுகிறது.

சாலையோரத்தில் சரக்கு வாகனத்தில் வைத்து விற்கப்படும் தக்காளி ஒன்றரை கிலோ ₹80 முதல் ₹90க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில ஓட்டல்களில் தக்காளி விலை உயர்வின் காரணமாக தக்காளி சட்னி, தக்காளி சாதம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது. தக்காளி மட்டுமின்றி பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக பீன்ஸ், கேரட் விலை அதிகரித்துள்ளது.

 

The post ஓசூரில் தக்காளி விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: