போதை பொருள் தடுப்பு கருத்தரங்கு

ஊத்தங்கரை, அக்.17: ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், போதை பொருள் தடுப்பு குழு மூலம் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். விரிவுரையாளர் லோகேஷ்குமார் வரவேற்றார். மருத்துவர்கள் கணேஷ், கோகுல்கிருஷ்ணா ஆகியோர் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர் அன்புமணி செய்தார். விரிவுரையாளர் ஹரிபிரசாத் நன்றி கூறினார்.

The post போதை பொருள் தடுப்பு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: