இதை தொடர்ந்து கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நேற்று அரியானா முதல்வராக தொடர்ந்து 2ம் முறையாக நயாப்சிங் சைனி பதவி ஏற்றார். கடந்த மார்ச் மாதம் அரியானா முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டார் பதவி விலகியதை தொடர்ந்து முதல்வராக சைனி பதவி ஏற்றார். இப்போது தேர்தலில் வெற்றி பெற்றபிறகு தொடர்ந்து 2வது முறையாக பதவி ஏற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பு பஞ்ச்குலாவில் நடந்த விழாவில் நயாப் சிங் சைனிக்கு அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
* யார் இந்த சைனி?
1970ம் ஆண்டு ஜனவரி 25ல் அம்பாலாவின் மிர்சாபூர் மஜ்ரா கிராமத்தில் பிறந்த நயாப்சிங் சைனி, அரியானா பா.ஜவில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2014ல் நரேன்கர் தொகுதியிலிருந்து முதல்முறையாக போட்டியிட்டு எம்எல்ஏவானார். அப்போது தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019ல் குருஷேத்ரா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 அக்டோபர் மாதம் அரியானா பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். 2024 மார்ச் மாதம் அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு, புதிய முதல்வராக சைனி தேர்வு செய்யப்பட்டார். அக்.5ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகளை தாண்டி 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜவை 48 இடங்களில் வெற்றி பெற வைத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தி உள்ளார். அதற்கு பரிசாக மேலிடம் அவரை 2வது முறையாக முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து உள்ளது.
The post தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.