கடந்த 1960 மே 14ம் தேதி டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்ணாவின் தந்தை தேவ் ராஜ் கண்ணா 1985ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். டெல்லி சட்டப்பல்கலை கழகத்தில் சட்டம் பயின்ற சஞ்சீவ் கண்ணா, 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக பணியாற்றினார். 2005 ஜூன் 25ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019 ஜனவரி 18ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
The post உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா: டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை appeared first on Dinakaran.