இந்த நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் பாஜவை ஆட்சியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும். எங்கள் ஆட்சி மாநிலத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதற்குள்ளாக யல்லம்மா தொகுதியை சிறப்பான முறையில் வளர்ச்சி பெற செய்வதாக உறுதியளித்தார். மூடா முறைகேடு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வரும் நிலையில், மக்கள் ஆசி தனக்கு இருக்கும் வரை தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பாள்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post மக்கள் ஆசி எனக்கு இருக்கும் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது: முதல்வர் சித்தராமையா அதிரடி appeared first on Dinakaran.