கனடா உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது குற்றவாளிகளான டேனர் ஃபாக்ஸ், ஜோஸ் லோபஸ் ஆகிய இருவரும், ரிபுதமன் சிங் மாலிக்கை கொன்றது தாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களின் வாக்குமூலத்தின் மூலம் ரிபுதமன் சிங் மாலிக் கொலைக்கு இந்தியாவை குற்றம்சாட்டிய கனடா பிரதமரின் கூற்று ஆதாரமற்றது என்பது நிரூபணமாகி உள்ளது. முன்னதாக காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையைப் போலவே, காலிஸ்தான் ஆதரவாளர் ரிபுதமன் சிங் மாலிக் கொலைக்கும் இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ரிபுதாமன் சிங் மாலிக் கொலையில் தொடர்புடைய இரு குற்றவாளிகளும் கனடா நீதிமன்றத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கனடா பிரதமரின் பொய் அம்பலமாகி உள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் ரிபுதமன் சிங் மாலிக் கொலை வழக்கில் வரும் அக்டோபர் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஆஜராக, இருவரின் வயதைக் காரணம் காட்டி குறைந்த தண்டனை வழங்குமாறு முறையிட்டார். அதே சமயம், ரிபுதமன் சிங் மாலிக்கின் குடும்பத்தினர், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இப்போது எங்களுக்கு நீதி கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தனர்.
The post இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடா பிரதமரின் மற்றொரு பொய் அம்பலமானது appeared first on Dinakaran.