சௌண்டம்மன் கோயில் நவராத்திரி விழா நிறைவு

 

குமாரபாளையம், அக்.14: சௌண்டம்மன் கோயில், நவராத்திரி விழா நிறைவு நாளில் கடவுள்கள் வேடங்களில் சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர். குமாரபாளையம் சௌண்டம்மன் கோயியில், நவராத்திரி நிறைவு நாள் விழா விமரிசையாக நேறறு நடைபெற்றது. சிறுமிகளுக்கு சரஸ்வதி, லட்சுமி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் போடப்பட்டு கோயிலிலில் இருந்து திரு வீதி உலா அழைத்துச்செல்லப்பட்டனர். கோயில் வளாகத்திலும், திருவீதி உலா வாகனங்களின் முன்பும் சிறுமிகள் பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் ஆடிச்சென்றனர். கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சௌண்டம்மன் கோயில் நவராத்திரி விழா நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: