சரஸ்வதி பூஜையை ஒட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

சென்னை: சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இன்று நள்ளிரவு  12.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சையில் நாளை இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, திருவாரூரில் ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சரஸ்வதி பூஜையை ஒட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: