சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

 

மதுரை, அக். 10: மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் எச்எம்எஸ் காலனி சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க ரூ.53 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. விராட்டிபத்திலிருந்து வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறுமிடம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலிருந்து எச்எம்எஸ் காலனி சந்திப்பில் திரும்பும் இடத்தில் சாலை பலத்த சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், மேம்பாலத்தில் ஏறும்போதும், எச்எம்எஸ் காலனி சந்திப்பில் திரும்பும்போதும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே இச்சாலையின் பள்ளங்களை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

The post சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: