×

குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் 2,208 அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப்-4 பணிகளில் காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலி இடங்கள் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். தேர்வை எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 இடங்களை அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி. உத்தரவு பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 2 ஆயிரத்து 208 இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதன் மூலம் குரூப்-4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

The post குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் 2,208 அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Tamil Nadu Government Personnel Selection Board ,TNPSC ,Dinakaran ,
× RELATED தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத்...