மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பைத எதிர்த்து கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

 

மயிலாடுதுறை,அக்.9: மயிலாடுதுறை நகராட்சி விரிவாக்கத்திற்காக மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மன்னம்பந்தலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கூடினார். கலெக்டர் அலுவலகத்திற்கு வராமல் வேறுபணிக்காக வெளியில் சென்ற நிலையில் கலெக்டர் வராததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்ட்டர் அலுவலக வராண்டாவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் சந்திப்பார் என்று தெரிவித்தனர். இதற்கு கிராம மக்கள் ஒத்துக்கொள்ளாததால் பல மணிநேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

The post மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பைத எதிர்த்து கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: