மக்காச்சோளம் விதைப்பில் பெண்கள் மும்முரம்

 

பாடாலூர், அக். 9: உணவிற்கு ஆதாரமாக விளங்குவது விவசாய தொழில். அந்த விவசாய தொழிலே பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாகும். மாவட்டத்தில் பெரும் பாலும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் முக்கிய பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அந்த மழையின் ஈரத்தை பயன்படுத்தி மக்காச்சோளம் விதைப்பில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.பாடாலூர் விஜய கோ பாலபுரம் மக்காச்சோளம் விதைப்பு பணி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அந்த மழையின் ஈரத்தை பயன்படுத்தி மக்காச்சோளம் விதைப்பில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

 

The post மக்காச்சோளம் விதைப்பில் பெண்கள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: