திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

 

துறையூர், அக்.9: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெளிநாடு வேலைக்கு செல்ல தயாரான இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள து.ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதியின் மகன் பிரதீப்(20). இவர் துவாக்குடியில் கேட்டரிங் படித்திருந்த இவர் ஒருசில நாட்களில் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக எலக்ட்ரிக் ஹீட்டரில் சுடு தண்ணீர் போட்டாராம். சிறிது நேரம் கழித்து தண்ணீர் சுட்டுவிட்டதா? என தண்ணீருக்குள் கையை விட்டுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து அவரை உறவினர்கள் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த தனியார் மருத்துவர் பிரதீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பான தகவலின் பேரில் துறையூர் போலீசார் பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: