கடலாடி அருகே என்எஸ்எஸ் திட்ட முகாம்

சாயல்குடி, அக். 5: கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் கே.கரிசல்குளம் கிராமத்தில் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜா தலைமை வகித்தார். திட்ட அலுவலர் சொக்கர் முன்னிலை வகித்தார். வழிபாட்டு தலங்கள், குளம், பொது இடங்களில் தூய்மை பணி, மரம் நடுதல் போன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.பிளாஸ்டிக், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம், சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் மீட்பு, முதலுதவி, மழைக்காலம், தீ விபத்து போன்ற பேரிடர் காலத்தில் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை காப்பாற்றுதல் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, தோட்டக்கலை சார்பில் அரசு பள்ளிகளில் மாடித்தோட்டம் அமைத்தல் உள்ளிட்டவை நடந்தது.

The post கடலாடி அருகே என்எஸ்எஸ் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: