இந்திக்கு மட்டும் எப்படி ஆள் கிடைக்கிறது?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

சென்னை: மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என கைவிரிக்கும் போது இந்திக்கு மட்டும் எப்படி ஆள் கிடைக்கிறது? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். முதல் நிலை அதிகாரிகள் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி ஆகவில்லை என்ற அறிவிப்பு பற்றி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினேன். இந்தி அதிகாரி, முதுநிலை உதவி செயலர் பதவிக்கு ஆன்லைன் தேர்வில் 23 பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தீ அணைப்பை விட முக்கியம் இந்தி திணிப்பு; இதுதான் ஒன்றிய அரசின் நாசகர மொழிக்கொள்கை என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

The post இந்திக்கு மட்டும் எப்படி ஆள் கிடைக்கிறது?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: