பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்

மதுரை : நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத துணை முதல்வர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் கூறப்படுகிறது. இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: