×

2024-25ம் ஆண்டு அறிவித்த திட்டங்களின் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் : தமிழக அமைச்சர்கள் தகவல்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 2024-25ஆம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று (3.10.2024), சென்னை, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவூர் குளத்தை ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும், ஆதம்பாக்கம் ஏரியை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் ஆலந்தூர், புதுத்தெருவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய சமுதாய நலக் கூடத்தினையும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன் அவர்கள், தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர்கள் திரு.ராஜமகேஷ்குமார், திரு.மா.பாலமுருகன், முதுநிலை திட்ட அமைப்பாளர் திருமதி.அனுஷியா ரவிக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் (கோவூர்) திரு.சுதாகர், (தண்டலம்) திரு.அரசு, (இரண்டாம் கட்டளை) திரு.சுகுமார், (ஐயப்பன்தாங்கல்) திருமதி.ஜமீலா பாண்டுரங்கன், மண்டல அலுவலர் திரு.பி.எஸ்.சீனிவாசன், செயற்பொறியாளர் திரு.பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பூங்கொடி ஜெகதீஸ்வரன், திருமதி.பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரு.வந்தே மாதரம், திரு.அன்பழகன், திரு.குமரவேல், திரு.பாண்டுரங்கன், திரு.எத்திராஜ், திரு.தேசிங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post 2024-25ம் ஆண்டு அறிவித்த திட்டங்களின் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் : தமிழக அமைச்சர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Minister ,Micro ,Small ,Medium ,Enterprises ,Shri. Tha. Mo. ANBARASAN ,HINDU ,
× RELATED தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு