இதில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பெருமை வாய்ந்த பழங்கால விமானங்கள் உள்ளிட்டவை பங்காற்ற உள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர். அதேபோல், இலவசமாக மக்கள் சாகச நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கபட உள்ளதால் அன்றைய தினம் மெரினா கடற்கரைக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி, விமான சாக நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று மெரினா கடற்கரையில் மதியம் 1.20 மணி முதல் 3.45 மணி வரை நடத்தப்பட்டன. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்காக பெங்களூரு, அரக்கோணம், சூலூர், தாம்பரம் விமானப்படை தளத்தில் இருக்கும் போர்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 72 ரகங்களில் போர் படை விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டன. விமான சாக நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று தொடங்கிய நிலையில் வரும் 5ம் தேதி வரை இதனை நடத்த விமானப்படையினரால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடத்தப்படுவதால் பாதுகாப்பு நலன் கருதி மெரினா கடற்கரை மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 6 தினங்களுக்கு விமான சேவைக்கான பட்டியலிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, 23 ஆண்டுகள் கழித்து தற்போது சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.