அந்தவகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்.4ம் தேதி 260 பேருந்துகளும், அக்.5ம் தேதி 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அக்.4ம் தேதி 55 பேருந்துகளும், அக்.5ம் தேதி 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுதவிர பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும், மாதவரத்திலிருந்து அக்.4ம் தேதி 15 பேருந்துகளும், அக்.5ம் தேதி 15 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், அக்.6ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது என அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The post வார இறுதி நாட்களை ஒட்டி 790 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.