ஓசூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூர், செப்.29: ஓசூர் மாநகரம், மேற்கு பகுதி 5வது வார்டில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ரகு வரவேற்றார். இதில் மேற்கு பகுதி செயலாளர் துனை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பிரதிநிதி மண்டல குழு தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பகுதி நிர்வாகிகள் முனிரத்தினம், அண்ணாமலை, சுரேஷ், ராபின், செல்லமுத்து, பிரபாகரன், ஏழுமலை, பாஸ்கர், பிரியா, ரகு, அசோக்குமார், ஜனார்த்தன், துரை ஆறுமுகம், சின்னப்பன், திம்மராஜ், ஆரோக்கியசாமி, ரவிக்குமார், பக்தவத்சலம், சேட்டு, தாமோதரன், ஆறுமுகம், நாகராஜ், சதீஷ், மணி, சதீஷ்குமார், ராஜா, அன்பரசு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஓசூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: