குறு, சிறு நிறுவனங்களின் மனுக்கள் மீது விரைந்து தீர்வு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை: குறு, சிறு நிறுவனங்களின் மனுக்கள் மீது விரைந்து தீர்வுகாண தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேலூர் மற்றும் தூத்துக்குடியில் புதிதாக 2 குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு சென்னை மற்றும் வேலூர் மண்டலம், மதுரை மண்டலம் இரு பிரிவுகளாக பிரித்து மதுரை மற்றும் தூத்துக்குடி மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக அமைக்கப்பட்டது. இதன் மூலம் குறு, சிறு நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை துரிதமாக பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post குறு, சிறு நிறுவனங்களின் மனுக்கள் மீது விரைந்து தீர்வு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: