இதை அவருடைய ரசிகன் என்ற முறையிலும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சார்பிலும், என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன் மற்றும் தயாநிதி மாறன் எம்பி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வார்டு கவுன்சிலர் சிற்றரசு ஆகியோரிடமும் எஸ்.பி.பி.சரண் மனு அளித்துள்ளார்.
The post மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை appeared first on Dinakaran.