×

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், காட்டிநாயனப்பள்ளியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் அருகே, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், நேற்று முன்தினம் ஊழியர்கள் பணத்தை நிரப்பி விட்டு சென்றனர்.

இந்நிலையில், அங்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், ஏடிஎம் மையத்தின் வெளியே மற்றும் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மீது, கருப்பு நிற மையை ஸ்பிரே மூலம் அடித்துள்ளனர். பின்னர், காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து, அதிலிருந்த ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,District Teacher Training and Education Institute ,Kattanayanapally ,Krishnagiri-Kuppam National Highway ,
× RELATED அரசு உருவாக்கி உள்ள வேலை...