×

கீழடியில் 25 பானைகள் கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பாசி மற்றும் கண்ணாடி மணிகள், ‘தா’ என்ற ‘தமிழி’ எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

8 குழிகளிலும், 5 பெரிய பானைகளும், 20க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பானைகளும் கண்டறியப்பட்டது. ஏற்கனவே கண்டறியப்பட்ட பானைகளுக்குள் மஞ்சள், தேங்காய் எண்ணெய், வாழைக்காய் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

The post கீழடியில் 25 பானைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : THIRUPUWANAM ,SIVAGANGA DISTRICT, ,KALADII ,
× RELATED அரசு உருவாக்கி உள்ள வேலை...