ரோட்டில் நடந்து சென்றபோது கார் மோதி தந்தை, மகள் சாவு

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம், முகமதுஷாபுரம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் துளசிநாதன்(33). மனைவி விஜயலட்சுமி. மகள் சஷ்டிகா(6). திருமங்கலத்திலுள்ள ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை துளசிநாதன் தனது மகளுடன் திருமங்கலம் – சோழவந்தான் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றபோது சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு அதிவேகத்தில் சென்ற கார் நிலைதடுமாறி சர்வீஸ் ரோட்டில் இறங்கி, தந்தை, மகள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மகள் சஷ்டிகா அதே இடத்திலும், தந்தை துளசிநாதன் மருத்துவமனையிலும் இறந்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த நாகர்கோவிலை சேர்ந்த எத்தின் ஜோசப்பை கைது செய்தனர்.

The post ரோட்டில் நடந்து சென்றபோது கார் மோதி தந்தை, மகள் சாவு appeared first on Dinakaran.

Related Stories: